உடம்பிலுள்ள கொழுப்பைக் குறைத்து, உடலை இளைக்க வைக்கும் தன்மை கொள்ளிற்கு உண்டு.
அதனால்தான் "இளைத்தவனுக்கு எள்ளு. கொழுத்தவனுக்கு கொள்ளு" என்னும் சொற்றொடர் வழக்கிலுள்ளது.
வாரம் ஒரு முறையாவது கொள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால், ஊளைச்சதை நிச்சயம் குறையும்.
கொள்ளில், ரசம், சூப், குழம்பு, துவையல், சுண்டல் அனைத்தும் செய்யலாம். கொள்ளுப்பொடியைத் தயாரித்து வைத்துக் கொண்டால், சமையலில் சேர்க்க எளிதாக இருக்கும். கடைகளில் இந்தப்பொடி கிடைக்கிறது. வீட்டிலும் இதைத் தயாரிக்கலாம்.
தேவையானப்பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில், உப்பைத்தவிர, மேற்கண்ட பொருட்களை, தனித்தனியாக வறுத்தெடுத்து ஆற விடவும்.
ஆறியபின், உப்பு சேர்த்து நன்றாகப் பொடித்தெடுக்கவும்.
இந்தப்பொடியை, சூடான சாதத்தில் போட்டு, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணையுடன் சாப்பிட சுவையாயிருக்கும். நெய், எண்ணை தவிர்த்தும் சாப்பிடலாம்.
ரசம் செய்யும் பொழுது, இந்தப்பொடியைச் சேர்த்து கொள்ளு ரசமாக செய்யலாம்.
துவையல், சூப் செய்யும் பொழுதும் உபயோகிக்கலாம்.
0 comments: on "கொள்ளுப்பொடி"
Post a Comment